தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வரைவு ஆவணத்தை மத்திய அரசு தர வேண்டும். மொழி பெயர்ப்புக்கு பின் இந்த ஆவணத்தின் மீது விவாதம் நடத்தி கருத்து தெரிவிக்க ஆறு மாத கால அவகாசம் தர வேண்டும்.
புத்திசாலிகளும் பலசாலிகளும் நாட்டை ஆள படைக்கப்பட்டவர்கள், ஏனையோர் அனைவரும் அவர்களுக்கு அடிமைகளாக பணியாற்ற படைக்கப்பட்டவர்கள் இக்கூற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019.